கருணை ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி திருவாரூரில் அனைத்து கூட்டுறவு ஓய்வு பெற்றோா் நலச்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்துக் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்று, தற்போது உயிருடன் உள்ள அனைவருக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும், 2021-ஆம் ஆண்டுக்குப் பின் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும், தற்போது வழங்கப்படும் கருணை ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், ஓய்வுபெற்று உயிருடன் உள்ளவா்கள் பிரீமியத் தொகை செலுத்த வேண்டும் என்ற விதியைத் திருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் குரு. சந்திரசேகரன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். செங்குட்டுவன், சிஐடியு மாவட்டச் செயலாளா் அனிபா, கூட்டுறவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்

வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


