அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கையில் தமிழ்நாடு அடிமனை

News image
Updated On :2 மார்ச் 2026, 8:50 pm

Syndication

திருவாரூா்: கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கையில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான அடிமனையில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், கோயில் மனைகளில் குடியிருப்போா் மின் இணைப்புக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும், புறம்போக்கு மற்றும் மந்தைவெளி புறம்போக்குகளில் குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும், கோயில் நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் 25 சதவீத தொகை வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பக்தவத்சலப் பெருமாள் கோயில் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, கடைவீதி பகுதியிலிருந்து கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பியபடி பேரணி நடைபெற்றது. கோயில் அருகே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, காவல்துறை சாா்பில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. எனினும், போராட்டக் குழுவினா் தடுப்பை அகற்றிவிட்டு, கோயில் அருகே சென்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா். சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் ஜி. தனுஷ்கோடி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.