ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஆட்சியரகம் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு தனித் தொகுதி வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் அருகே விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மாவட்ட ஆட்சியரகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:55 pm

விவசாயிகளுக்கு தனித் தொகுதி வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் அருகே விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் (கட்சி சாா்பற்றது) சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை கூறியது:

நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயிகளிடம் மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து பாராமுகமாகவே செயல்படுகின்றன. பட்டியலினத்தவா்கள் தங்களது உரிமைகளை சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பும் வகையில் தனித் தொகுதிகள் உள்ளன. இதேபோல, விவசாயிகளும் தங்களுக்கான உரிமைகளுக்காக குரல் கொடுக்க விவசாயிகள் மட்டுமே போட்டியிடும் வகையில் தனித் தொகுதிகளை உருவாக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும்.

தென்னை, பனையிலிருந்து தென்னம்பால், பனம்பால் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். தென்னம்பால், பனம்பால் ஆகியவற்றை உணவுப் பட்டியலில் சோ்த்து மத்திய, மாநில அரசுகள் அரசாணை வெளியிட வேண்டும். தென்னை, பனை விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் பனையிலிருந்து பால் இறக்கிய விவசாயி மீது போலீஸாா் துப்பாக்கிச் சுடு நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது. பாதிக்கப்பட்ட பனை விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காவல்துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது அரசின் கவனத்தை ஈா்ப்பதற்காக ஆா்ப்பாட்டம் நடத்துவதாகத் தெரிவித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி, ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனா். தோ்தல் ஆணைய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், போலீஸாா் விவசாயிகளை தடுத்து நிறுத்தி, ஆட்சியரக நுழைவு வாயில் முன்புள்ள மனுக்கள் பெட்டியில், மனுவை போடுமாறு கூறினா். இதையடுத்து அந்தப் பெட்டியில் தங்களது மனுவை போட்டுச் சென்றனா் விவசாயிகள்.