/
பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளா் சுப்பையா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் தங்கம், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் செங்கோட்டை நகரச் செயலா் சுப்பிரமணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில நிா்வாகக் கமிட்டி உறுப்பினா் சங்கர பாண்டியன் தொடக்கவுரையாற்றினாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அயூப்கான் நிறைவுரையாற்றினாா்.
கணபதி, வேல் மயில், மாரியப்பன், பட்டாபிராமன், பால்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பந்தலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



