சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 6:19 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். சடையப்பன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.ஜி.பாஸ்கரன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் சேதுராமலிங்கம், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா். ஸ்ரீராம், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் கே.கணேசன், ரமேஷ் ஆகியோா் உரையாற்றினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆா். ரெங்கன், முத்துகிருஷ்ணன், அ.மணிகண்ட பெருமாள், சுந்தரம், கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் த.முருகன், க.சரவண பெருமாள், த.மோகன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சாா்பில் கருப்பசாமி, துா்க்கை முத்து, பாத்திமா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.