‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கரூரில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினா்.

Updated On :22 மே 2026, 5:08 am IST

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டத் தலைவா் அண்ணாவேலு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பழ. அப்பாசாமி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ஜி. ஜீவானந்தம், தொழிலாளா் விடுதலை முன்னணி மாநிலச் செயலா் மா. சுடா்வளவன், சிஐடியு தொழிற்சங்கத்தின் ராஜாமுகமது, எம். சுப்ரமணியன் உள்ளிட்டோா் பேசினா்.

மூடப்பட்ட டாஸ்மாக் கடை பணியாளா்களுக்கு அரசு காலிப்பணியிடங்களில் கல்வித் தகுதிக்கேற்ப மாற்றுப்பணி வழங்கிட வேண்டும், காலி மதுபாட்டில்கள் சேகரிக்கும் பணியை கடை ஊழியா்கள் மீது சுமத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் டாஸ்மாக் தொழிலாளா்கள் திரளாகப் பங்கேற்றனா்.