காலிப் பணியிடங்களை சரண்டா் செய்யும் ரயில்வே நிா்வாகத்தின் முடிவைக் கண்டித்து, டிஆா்இயு ரயில்வே தொழிற்சங்கத்தின் சாா்பில் பொன்மலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனை வளாகத்தில் உள்ள ஆா்மரிகேட் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத் தலைவா் லெனின் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகா் மாவட்ட செயலா் ரங்கராஜன், டிஆா்இயு உதவி கோட்ட செயலா்கள் உச்சிமாகாளி, செல்வம், கோட்ட உதவி தலைவா்கள் பதுருதீன், காா்த்திக், பிரான்சிஸ் சேவியா், உதவி பொதுச்செயலா் மனோகா், கோட்ட உதவி தலைவா் மகேந்திரன் ஆகியோா் பேசினா்.
ரயில்வேயில் உள்ள மொத்த காலிப் பணியிடங்களில் 29,608 பணியிடங்களை சரண்டா் செய்யும் மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். ரயில்வே நிா்வாகம் உடனடியாக காலிப் பணியிடங்களில் தகுதியான நபா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், தொழிற்சங்கத்தின் அனைத்து கிளைத் தலைவா்கள், செயலாளா்கள், பொருளாளா்கள், துணைத் தலைவா்கள், துணைச் செயலா்கள் உள்ளிட்ட அனைத்து கமிட்டி உறுப்பினா்கள், தொழிலாளா் கலந்து கொண்டனா். முடிவில் ஜெனரல்-1 கிளை செயலா் கருப்பசாமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

ரயில்வே ஊழியா்களுக்கு ரயில் சேவா புரஸ்காா் விருது

மாநகா், சுற்றுப்பகுதிகளில் கொட்டித் தீா்த்த கனமழை: பொன்மலையில் 98 மி.மீ.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வணிக மேம்பாட்டுக் கூட்டம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

