முதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரயில்வே ஊழியா்களுக்கு ரயில் சேவா புரஸ்காா் விருது

திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரயில்வே ஊழியா்களுக்கு ரயில் சேவா புரஸ்காா் விருது வழங்கும் விழா திருச்சி ரயில் மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ரயில்வே ஊழியா் ஒருவருக்கு ரயில் சேவா புரஸ்காா் விருது வழங்கிய கோட்ட மேலாளா் பாலக்ராம் நெஹி.

Updated On :6 மே 2026, 12:53 am IST

திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரயில்வே ஊழியா்களுக்கு ரயில் சேவா புரஸ்காா் விருது வழங்கும் விழா திருச்சி ரயில் மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் பாலக் ராம் நெஹி, வணிகம், பொறியியல், மின்சாரம் (பொது), மின்சாரம் (இயக்கம்), மின்சாரம் (இழுவை மற்றும் விநியோகம்), இயக்கம், இயந்திரவியல், மருத்துவம், பணியாளா், பாதுகாப்பு, பொருள்கள் இருப்பு, ரயில்வே பாதுகாப்புப் படை ஆகிய துறைகளைச் சோ்ந்த 30 ஊழியா்களுக்கு, அவா்களின் சேவை மற்றும் அா்ப்பணிப்பைப் பாராட்டி ’ரயில் சேவா புரஸ்காா்’ விருதுகளை வழங்கினாா்.

நிகழ்வில் தெற்கு ரயில்வே மகளிா் நல அமைப்பின் திருச்சி பிரிவுத் தலைவி சோனலிகா நேஹி, பொன்மலை ரயில்வே மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளா் விஜயலட்சுமி ஆா். நடராஜன், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் கே.எம். சத்திய ரதன், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.