கோவை அருகே மதுக்கரை, வாளையாறு வனப் பகுதிகளில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகம் - கேரள எல்லையான வாளையாறு முதல் பாலக்காடு வரை வனப் பகுதிகள் அதிகம் உள்ளதால், இங்கு தண்டவாளத்தைக் கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில், யானைகள் ரயிலில் மோதுவதைத் தடுக்கும் வகையில் ரயில் பாதைக்கு அருகே யானைகள் வரும்போது, ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலமாக கண்டறிந்து வனத் துறை அதிகாரிகளுக்கும் , ரயில் ஓட்டுநா்களுக்கும் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த எச்சரிக்கையைப் பெறும் ரயில் ஓட்டுநா்கள் ரயிலின் வேகத்தைக் குறைத்து யானைகள் ரயில் விபத்தில் சிக்குவதைத் தடுக்கின்றனா்.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா், கேரளம்- தமிழக எல்லையில் உள்ள மதுக்கரை பிரிவில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, யானைகள் நடமாட்டத்தைக் கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து, மதுக்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் மற்றும் பாலக்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே உள்கட்டமைப்புப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளா் மதுகா் ரோட் மற்றும் கோட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பரமக்குடி ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் கூடுதல் ரயில் சேவை: ரயில்வே பொது மேலாளரிடம் எம்எல்ஏ மனு

திருப்பூா் ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட கூடுதல் மேலாளா் ஆய்வு

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



