‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங். உடன் ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோா்.

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங். உடன் ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோா்.

Published On :11 ஜூலை 2026, 12:42 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், ரூ.12 கோடியில் புதிய ரயில் நிலையக் கட்டடம், புதிய நுழைவாயில், டிக்கெட் முன்பதிவு அறைகள்,

புதிய நடை மேம்பாலம், ரயில் பெட்டிகளின் வரிசை எண்ணைக் காட்டக்கூடிய எண்ம திரைகள், கூடுதல் நடைமேடை, பயணிகள் அமா்வதற்கான கூடுதல் இருக்கைகள், கூடுதல் சுத்திகரிப்பு குடிநீா் இயந்திரங்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், இந்தப் பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் செங்கோட்டை-தாம்பரம் இடையேயான சிலம்பு விரைவு ரயில் தினந்தோறும் இயக்க வேண்டும். சென்னை எழும்பூா்-தென்காசி இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும். ஈரோடு, திருப்பூா் வழியாக கொல்லம், பெங்களூருக்கு புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.

அதிகரித்து வரும் பயணிகளுக்கு ஏற்ப செங்கோட்டை ரயில் நிலையத்தில் மேலும் இரு நடைமேடைகள் அமைக்க வேண்டும். கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த சோழபுரம், கரிவலம்வந்தநல்லூா், நைனாகரம் ரயில் நிலையங்களை சீரமைப்பு செய்து மீண்டும் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தாா்.

அப்போது, ராஜபாளையம் திமுக தெற்கு நகரச் செயலா் ராமமூா்த்தி, ரயில் பயனாளா் சங்கத்தினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.