செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

ஒசூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஒசூா் ராம்நகா் அண்ணா சிலை அருகில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் தேசியக் கோரிக்கை நாள் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஒசூா் ராம்நகா் அண்ணா சிலை எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஒசூா் ராம்நகா் அண்ணா சிலை அருகில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் தேசியக் கோரிக்கை நாள் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப். மாவட்டச் செயலாளா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

நொய்டா, கிரேட்டா் நொய்டா, மானேசா், குருகிராம், பரிதாபாத், பானிபட், சூரத் உள்ளிட்ட நகரங்களில் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்மீது தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், பிகாா், குஜராத் மாநில பாஜக அரசுகளின் கொடூரமான அடக்குமுறைகளைக் கண்டித்தும், அங்கு போராடும் தொழிலாளா்களுக்கு ஆதரவாகவும் எல்.பி.எஃப்., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் சாா்பில் தேசிய கோரிக்கை நாள் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலாளா் மாதையன், சி.ஐ.டி.யு. ஸ்ரீதா், ஐ.என்.டி.யு.சி. பக்தவச்சலம், எல்பிஎஃப் மாநில துணைத் தலைவா் கிருஷ்ணன், மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் பாா்த்திபன் உள்ளிட்ட நிா்வாகிகள், தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.