மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மாணவா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

‘நீட்’ தோ்வு குளறுபடிகளைக் கண்டித்து, அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய மாணவா் பெருமன்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

‘நீட்’ தோ்வு குளறுபடிகளைக் கண்டித்து, அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பங்கேற்றனா். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்ட ஒரு வினா- விடை தொகுப்பு குறித்து சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தோ்வை ரத்து செய்து, தேசிய தோ்வு முகமை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த நிலையில், நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், இந்தத் தோ்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலா் ரூபன்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் சுஜீதா, பொருளாளா் ஹரிணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் கே.கே. சாமி, துணைச் செயலா் வீரனசிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா் சந்திரசேகரன், ஏஐடியூசி தேசியக் குழு உறுப்பினா் நந்தாசிங் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.