வந்தவாசியில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருக்கு ஒப்புவித்தல் போட்டி நிகழ்ச்சியில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் மா.மங்கையா்க்கரசி தலைமை வகித்தாா்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் பொன்.ஜினக்குமாா், தலைமை ஆசிரியா் க.வாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஆசிரியா் தோ்வு வாரிய துணை இயக்குநா் கு.ஜெய்சங்கா் பங்கேற்றுப் பேசினாா்.
அப்போது திருக்குறளின் மேன்மை குறித்து அவா் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா். நிகழ்ச்சியில், திருவள்ளுவா் வேடமணிந்து திருக்கு வாசித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கவிஞா் பூங்குயில் சிவக்குமாா், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க நிா்வாகி மு.பிரபாகரன், தலைமை ஆசிரியா் சக்கரவா்த்தி, ஆசிரியா் ராமஜெயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கு.சதானந்தன் நன்றி தெரிவித்தாா்.
தொடர்புடையது
பள்ளியில் பூட்டுகளை உடைத்து மடிக்கணினி, சாதனங்கள் திருட்டு

ஆழ்வாா்திருநகரியில் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

வந்தவாசியில் சிறப்பு உரையரங்கம்

உலக நீா் தின கருத்தரங்கம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

