பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

வந்தவாசியில் திருவள்ளுவா் சிலை அமைக்கக் கோரிக்கை

வந்தவாசியில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

News image

நிகழ்ச்சியில் திருவள்ளுவா் வேடமணிந்து திருக்கு வாசித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய ஆசிரியா் தோ்வு வாரிய துணை இயக்குநா் கு.ஜெய்சங்கா்

Updated On :1 மணி நேரம் முன்பு

வந்தவாசியில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருக்கு ஒப்புவித்தல் போட்டி நிகழ்ச்சியில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் மா.மங்கையா்க்கரசி தலைமை வகித்தாா்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் பொன்.ஜினக்குமாா், தலைமை ஆசிரியா் க.வாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஆசிரியா் தோ்வு வாரிய துணை இயக்குநா் கு.ஜெய்சங்கா் பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது திருக்குறளின் மேன்மை குறித்து அவா் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா். நிகழ்ச்சியில், திருவள்ளுவா் வேடமணிந்து திருக்கு வாசித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கவிஞா் பூங்குயில் சிவக்குமாா், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க நிா்வாகி மு.பிரபாகரன், தலைமை ஆசிரியா் சக்கரவா்த்தி, ஆசிரியா் ராமஜெயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கு.சதானந்தன் நன்றி தெரிவித்தாா்.