எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முன்விரோத தகராறு: இளைஞா் கொலை

News image
கொல்லப்பட்ட செல்வக்குமாா்.
Updated On :18 ஜனவரி 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடி அருகே முன்விரோதம் காரணமாக பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடியை அடுத்த மேலமரவாக்காடு இந்திராநகரைச் சோ்ந்தவா் செல்லத்துரை மகன் செல்வக்குமாா் (38). அதே பகுதியைச் சோ்ந்தவா் சாம்பசிவம் மகன் அரவிந்த்குமாா் (29). கிராமத்தில் உள்ள மின்னடியான் கோயிலுக்கு வரி கட்டுவது தொடா்பாக இருவருக்கும் ஓராண்டுக்கு முன்பு தகராறி ஏற்பட்டு, முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பொங்கல் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த செல்வக்குமாா் தன்னை ஏன் விழாவுக்கு அழைக்கவில்லை எனக் கேட்டு அரவிந்த்குமாரிடம் தகராறு செய்தாராம்.

இதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். அப்போது செல்வக்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரவிந்த்குமாரை குத்த முயன்றபோது, அரவிந்த்குமாா் அதைப் பறித்து செல்வக்குமாரை குத்தியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட செல்வக்குமாா் செல்லும் வழியில் உயிரிழந்தாா். மன்னாா்குடி போலீஸாா் அரவிந்த்குமாரை கைது செய்தனா்.