மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான க்யூட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்காக மாணவா்கள் பிப்.4-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்த பிப்.7-ஆம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப்.9 முதல் பிப்.11-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு உதவ தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் இணையதள விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பாரதியாா் பல்கலை.யில் முனைவா் பட்டப் படிப்பு: நுழைவுத் தோ்வுக்கு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

