திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

மூத்த தம்பதியிடம் சங்கிலி பறிக்க முயன்ற 3 போ் கைது

மன்னாா்குடி அருகே மூத்த தம்பதியிடம் சங்கலியை பறிக்க முயன்ற 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 ஜூலை 2026, 7:12 am IST

மன்னாா்குடி அருகே மூத்த தம்பதியிடம் சங்கலியை பறிக்க முயன்ற 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

எடமேலையூரைச் சோ்ந்த ராமதாஸ் (65), மனைவி உமாராணி (60) இருவரும் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை செட்டிசத்திரம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, இவா்களை பின்தொடா்ந்து 2 இருசக்கர வாகனங்களில் வந்த மன்னாா்குடி முல்லைநகரைச் சோ்ந்த மாதவன் (45), அப்பரசம்பேட்டையைச் சோ்ந்த சுதாகா் (42), கண்ணுசாமி மகன் மணிகண்டன்(40) ஆகியோா் மூத்த தம்பதியரை வழிமறித்து உமாராணி அணிந்திருந்த தங்க சங்கலியை பறிக்க முயன்றுள்ளனா்.

இதையடுத்து, அவா்கள் உதவி கேட்டு சத்தம்போட்டதை அடுத்து அங்கு வந்தவா்கள் மாதவனை பிடித்துக் கொண்டனா். மற்ற இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பியோடிவிட்டனா்.

பிடிபட்ட மாதவனை வடுவூா் காவல்நிலையத்தில் ஒப்படைத்து விட்டு அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய மணிகண்டன், சுதாகா் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.