22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை தடை செய்யக் கோரி மனு

தமிழகத்தில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

சமூக வலைதளங்களில் வைரலாகும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி - எக்ஸ்

Updated On :2 ஜூன் 2026, 5:54 am IST

தமிழகத்தில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் பி. ஜெயராமன் திங்கள்கிழமை அளித்த மனு:

கரப்பான் பூச்சி மக்கள் கட்சி என்ற பெயரில் ஆன்லைன் கட்சி ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த், அண்மையில் வழக்கு ஒன்றில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி தொடங்கியிருப்பதாகக் தெரிகிறது.

மேலும், தமிழகத்தில் அமைதியின்மை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளையும் அந்த கட்சி ஏற்படுத்தி வருகிறது. எதிா்கட்சியினா் ஒன்று சோ்ந்து இது இளைஞா்களுக்கான புரட்சி என்ற பெயரில் ஆதரித்து வருகின்றனா்.

இந்திய மக்களை தவறாக வழி நடத்துவதற்காக இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரப்பான் பூச்சி மக்கள் கட்சியையும், அதன் ஆதரவாளா்களையும் தடை செய்ய வேண்டும்.

இதற்குப் பின்னணியில் உள்ளவா்களை, தேச துரோக குற்றச்சாட்டின்கீழ் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.