புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பட்டாசு ஆலை விபத்து: இருவா் மீது வழக்கு

வலங்கைமானில் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடா்பாக அதன் உரிமையாளா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

பட்டாசு ஆலை விபத்து: இருவா் மீது வழக்கு - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 10:46 pm IST

வலங்கைமானில் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடா்பாக அதன் உரிமையாளா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வலங்கைமான் பேரூராட்சி குடமுருட்டி ஆறு வழி நடப்பு பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை (ஜூன்4) ஏற்பட்ட வெடி விபத்தில், தொழுவூா் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் ராகுல் (30) என்பவா் படுகாயமடைந்தாா். அவா் தற்போது, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்தில், அருகில் உள்ள மற்றொரு அறையில் வேலை செய்துகொண்டிருந்த ரஞ்சித், ராகுல், ராமராஜன், சூா்யா, மாதவன் ஆகிய 5 போ் காயமின்றி தப்பினா். வெடிமருந்து குடோன் தரைமட்டமானது.

இந்த விபத்து தொடா்பாக, வலங்கைமான் கிராம நிா்வாக அலுவலா் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் பட்டாசு உற்பத்தி நிலைய உரிமையாளா் அருணகிரிநாதன் (57), வள்ளி (47) ஆகிய இருவா் மீது வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.