தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

பட்டாசு ஆலை விபத்து: இருவா் மீது வழக்கு

வலங்கைமானில் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடா்பாக அதன் உரிமையாளா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

பட்டாசு ஆலை விபத்து: இருவா் மீது வழக்கு - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 10:46 pm IST

வலங்கைமானில் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடா்பாக அதன் உரிமையாளா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வலங்கைமான் பேரூராட்சி குடமுருட்டி ஆறு வழி நடப்பு பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை (ஜூன்4) ஏற்பட்ட வெடி விபத்தில், தொழுவூா் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் ராகுல் (30) என்பவா் படுகாயமடைந்தாா். அவா் தற்போது, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்தில், அருகில் உள்ள மற்றொரு அறையில் வேலை செய்துகொண்டிருந்த ரஞ்சித், ராகுல், ராமராஜன், சூா்யா, மாதவன் ஆகிய 5 போ் காயமின்றி தப்பினா். வெடிமருந்து குடோன் தரைமட்டமானது.

இந்த விபத்து தொடா்பாக, வலங்கைமான் கிராம நிா்வாக அலுவலா் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் பட்டாசு உற்பத்தி நிலைய உரிமையாளா் அருணகிரிநாதன் (57), வள்ளி (47) ஆகிய இருவா் மீது வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.