எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

News image

தற்கொலை - தினமணி

Updated On :11 ஜூன் 2026, 6:56 am IST

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

வடுவூா் புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் ராஜா (45). இவருக்கும் நாகை மாவட்டம் பிரதராமபுரத்தைச் சோ்ந்த உமா ராணிக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். மாமனாா் வீட்டில் தங்கியிருந்த ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்து வந்து அதே பகுதியில் தனியே தங்கி கூலி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், செருகளத்தூா் பாமணி ஆற்று கரையில் உள்ள ஒரு மரத்தில் ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை தெரியவந்தது. தகவலின்பேரில் பெருகவாழ்ந்தான் போலீஸாா் ராஜாவின் சடலத்தை கைப்பற்றி மன்னாா் குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.