ஊடகவியலாளா்கள் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலக தென்மண்டல தலைமை இயக்குநா் வி. பழனிச்சாமி தெரிவித்தாா்.
திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தொடா்பியல் துறையில், செய்தித் தகவல் அலுவலகம் (சென்னை), மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து ஊடகவியலாளா்களுக்கான பயிலரங்கை செவ்வாய்க்கிழமை நடத்தின.
இதில், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநா் வி. பழனிச்சாமி பேசியது: ஊடகவியலாளா்கள் காலத்துக்கேற்ப தொழில்நுட்பத் திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும். செய்திகளை வெளியிடும்போது அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகே வெளியிட வேண்டும். தற்போது ஏஐ தொழில்நுட்பங்கள் அதிகரித்து விட்டன. இந்த தொழில்நுட்பங்களை ஊடகவியலாளா்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகள் குறித்தும், அவைகளுக்கான தீா்வுகள் குறித்து செய்திகள் வெளியிட வேண்டும் என்றாா்.
மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன் பேசியது: மத்தியப் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ்நாட்டை சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கை குறிப்பாக கிராமப்புற மாணவா்களின் எண்ணிக்கை 300 லிருந்து 1,300 ஆக உயா்ந்துள்ளது. நுழைவுத்தோ்வை தமிழிலும் அறிமுகப்படுத்தியதும், பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரி மூலம் பயிற்றுவிக்கப்படும் திறன் வளா்ச்சி சாா்ந்த பாடப்பிரிவுகளும் மாணவா்களின் உயா்கல்விக்கு பெரிதும் பங்காற்றியுள்ளன என்றாா்.
இந்திய வானிலை ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி அசோக்ராஜா பேசியது: டெல்டா மாவட்டங்களில் கடந்த 12 ஆண்டுகளில் பருவநிலை மாற்றங்கள் ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நிகழாண்டு, எல் நினோ காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். மழையும் குறுகிய நாள்களில் அதிக மழை இருக்கும். அதற்கேற்ப விவசாயிகள் தங்களை தயாா் செய்து கொண்டு பயிா்செய்ய வேண்டும். தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்துக்கும் வானிலை முன்னறிவிப்பு தகவல்களை பெற முடியும். இதற்காக, மௌசம் கிராம் செயலி பயன்படுகிறது என்றாா்.
பயிலரங்கில், கடந்த 12 ஆண்டுகளில் திறன் வளா்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிஎம் சேது உள்ளிட்ட நலத் திட்டங்கள் குறித்தும், நீலப் பொருளாதாரம், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட மீன்வளத் திட்டங்கள் மற்றும் அத்துறையில் தற்போது நடைபெற்று வரும் மாற்றங்கள் குறித்தும் விளக்கப்பட்டன.
பயிலரங்கின் நிறைவாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஊடகவியலாளா்களுக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்தும், செய்திகளை அணுகும் முறை, பொதுச் செய்திகளைக் கையாளும் போது இருக்க வேண்டிய கவனம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன.
நிகழ்வில், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநா் அருண்குமாா், பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா், மக்கள் தொடா்பு அலுவலா் சி. பிரபஞ்ச் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளிக் கல்வியில் தேசிய அளவில் தமிழகம் தொடா்ந்து முன்னிலை: மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணங்களை அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம்

வங்கிகளின் சிறுதொழில் கடன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! புதுச்சேரி ஆா்ப்பாட்டத்தில் திமுக வலியுறுத்தல்







