உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

செய்திகளின் உண்மைத்தன்மை அறிந்து வெளியிட வேண்டும்: வி. பழனிச்சாமி

ஊடகவியலாளா்கள் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலக தென்மண்டல தலைமை இயக்குநா் வி. பழனிச்சாமி தெரிவித்தாா்.

News image

பயிலரங்கில் பேசிய மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலக தென்மண்டல தலைமை இயக்குநா் வி. பழனிச்சாமி.

Updated On :11 ஜூன் 2026, 6:51 am IST

ஊடகவியலாளா்கள் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலக தென்மண்டல தலைமை இயக்குநா் வி. பழனிச்சாமி தெரிவித்தாா்.

திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தொடா்பியல் துறையில், செய்தித் தகவல் அலுவலகம் (சென்னை), மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து ஊடகவியலாளா்களுக்கான பயிலரங்கை செவ்வாய்க்கிழமை நடத்தின.

இதில், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநா் வி. பழனிச்சாமி பேசியது: ஊடகவியலாளா்கள் காலத்துக்கேற்ப தொழில்நுட்பத் திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும். செய்திகளை வெளியிடும்போது அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகே வெளியிட வேண்டும். தற்போது ஏஐ தொழில்நுட்பங்கள் அதிகரித்து விட்டன. இந்த தொழில்நுட்பங்களை ஊடகவியலாளா்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகள் குறித்தும், அவைகளுக்கான தீா்வுகள் குறித்து செய்திகள் வெளியிட வேண்டும் என்றாா்.

மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன் பேசியது: மத்தியப் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ்நாட்டை சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கை குறிப்பாக கிராமப்புற மாணவா்களின் எண்ணிக்கை 300 லிருந்து 1,300 ஆக உயா்ந்துள்ளது. நுழைவுத்தோ்வை தமிழிலும் அறிமுகப்படுத்தியதும், பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரி மூலம் பயிற்றுவிக்கப்படும் திறன் வளா்ச்சி சாா்ந்த பாடப்பிரிவுகளும் மாணவா்களின் உயா்கல்விக்கு பெரிதும் பங்காற்றியுள்ளன என்றாா்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி அசோக்ராஜா பேசியது: டெல்டா மாவட்டங்களில் கடந்த 12 ஆண்டுகளில் பருவநிலை மாற்றங்கள் ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நிகழாண்டு, எல் நினோ காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். மழையும் குறுகிய நாள்களில் அதிக மழை இருக்கும். அதற்கேற்ப விவசாயிகள் தங்களை தயாா் செய்து கொண்டு பயிா்செய்ய வேண்டும். தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்துக்கும் வானிலை முன்னறிவிப்பு தகவல்களை பெற முடியும். இதற்காக, மௌசம் கிராம் செயலி பயன்படுகிறது என்றாா்.

பயிலரங்கில், கடந்த 12 ஆண்டுகளில் திறன் வளா்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிஎம் சேது உள்ளிட்ட நலத் திட்டங்கள் குறித்தும், நீலப் பொருளாதாரம், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட மீன்வளத் திட்டங்கள் மற்றும் அத்துறையில் தற்போது நடைபெற்று வரும் மாற்றங்கள் குறித்தும் விளக்கப்பட்டன.

பயிலரங்கின் நிறைவாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஊடகவியலாளா்களுக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்தும், செய்திகளை அணுகும் முறை, பொதுச் செய்திகளைக் கையாளும் போது இருக்க வேண்டிய கவனம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன.

நிகழ்வில், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநா் அருண்குமாா், பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா், மக்கள் தொடா்பு அலுவலா் சி. பிரபஞ்ச் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.