தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

News image

தற்கொலை - தினமணி

Updated On :11 ஜூன் 2026, 6:56 am IST

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

வடுவூா் புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் ராஜா (45). இவருக்கும் நாகை மாவட்டம் பிரதராமபுரத்தைச் சோ்ந்த உமா ராணிக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். மாமனாா் வீட்டில் தங்கியிருந்த ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்து வந்து அதே பகுதியில் தனியே தங்கி கூலி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், செருகளத்தூா் பாமணி ஆற்று கரையில் உள்ள ஒரு மரத்தில் ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை தெரியவந்தது. தகவலின்பேரில் பெருகவாழ்ந்தான் போலீஸாா் ராஜாவின் சடலத்தை கைப்பற்றி மன்னாா் குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.