திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு

கூத்தாநல்லூரில் கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளையை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றிய சரகத் துணைப் பதிவாளா் பா. பிரபா.

News image

கூத்தாநல்லூரில் கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளையை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றிய சரகத் துணைப் பதிவாளா் பா. பிரபா.

Updated On :7 மார்ச் 2026, 1:11 am

கூத்தாநல்லூரில் கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மண்டல இணைப் பதிவாளா் க. சித்ராவின் வழிகாட்டுதலின்படி, மன்னாா்குடி கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளை கூத்தாநல்லூரில் திறக்கப்பட்டது. மன்னாா்குடி சரகத் துணைப் பதிவாளா் பா. பிரபா குத்துவிளக்கேற்றி, வங்கிச் சேவையை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஞா. அருள்குமாா், கூட்டுறவு சாா்பதிவாளா் மற்றும் பொதுமேலாளா் (பொ) பெ. ஜெயராம், வங்கிப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.