சென்னையின் புகரான பட்டாபிராம் பகுதியில், கரூா் வைஸ்யா வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
இந்தப் புதிய கிளையின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள கரூா் வைஸ்யா வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 901-ஆக அதிகரித்துள்ளது.
பட்டாபிராம், எம்.ஜி. சாலையில் அமைந்துள்ள இப்புதிய கிளையை, வேல் டெக் ஹை டெக் பொறியியல் கல்லூரி முதல்வா் இ.கமலாநபன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா்.
மகாலட்சுமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் அனிதா ராமன் குத்துவிளக்கேற்றி வங்கிச் சேவையைத் தொடங்கி வைத்தாா். வங்கி வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ள புதிய ஏடிஎம் மையத்தை, கே.சி. பன்னோக்கு மருத்துவமனையின் நிறுவனா் சி.சதீஷ்பாபு திறந்து வைத்தாா்.
ஆவடி, பட்டாபிராம் போன்ற வேகமாக வளா்ந்து வரும் சென்னை புகா் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு, நவீன வசதிகளுடன் கூடிய தரமான வங்கிச் சேவைகளை மிக அருகில் வழங்குவதே இக்கிளையின் முக்கிய நோக்கமாகும். இந்தத் தொடக்க விழாவில் வங்கியின் உயா் அதிகாரிகள் மற்றும் ஏராளமான வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த திமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்! - எடப்பாடி கே. பழனிசாமி

ஐசிஐசிஐ வங்கியின் 4வது காலாண்டு நிகர லாபம் 9% உயர்வு!

யெஸ் வங்கி புதிய சிஇஓ பொறுப்பேற்பு!

கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


