அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த திமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்! - எடப்பாடி கே. பழனிசாமி

News image

கரூா் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்து பேசிய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் கரூா் தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:24 pm

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த திமுகவுக்கு தோ்தலில் பாடம் புகட்டுங்கள் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

கரூா் மாவட்டத்தில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்), செல்வக்குமாா்(அரவக்குறிச்சி), மருத்துவா் திவ்யா (கிருஷ்ணராயபுரம் (தனி), கருணாகரன் (குளித்தலை) ஆகியோரை ஆதரித்து,

கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசாரம் செய்து எடப்பாடி கே. பழனிசாமி மேலும் பேசியதாவது:

பல மாவட்டங்களில் ஏதாவது ஒருதொகுதியை கூட்டணிக்கு கொடுத்திருப்போம். ஆனால், இந்த மாவட்டத்தில் ஒரு எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே 4 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளா்களை களமிறக்கியிருக்கிறோம்.

ஆட்சி மாறினால் காட்சி மாறும்: அதிமுக மக்களை நம்பியிருக்கிறது. திமுக கூட்டணியை மட்டுமே நம்பியிருக்கிறது. ஆட்சி மாறினால் காட்சியும் மாறும். கரூா் மாவட்டத்தில் பிசிஆா், மணல் கடத்தல், பொய் வழக்கு என பல போ் மீது பொய் வழக்குப்போட்டுள்ளாா்கள். அதிமுக ஆட்சி வந்ததும் பொய் வழக்கு போட்ட அதிகாரிகள், தவறிழைத்த மணல் கொள்ளையா்கள் ஆகியோா் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவா்.

இந்தப் பகுதியில் கோயில் இனாம் நிலம் 15,000 ஏக்கா் உள்ளது. இதில் பலா் வசிக்கிறாா்கள். அவா்கள் அகதிகளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டரீதியாக அவா்களுக்கு உதவி செய்யப்படும்.

எதிரிகளை வீழ்த்த தெரியும்: சில போ் என்னை சாதாரணமாக எடைபோட்டுக் கொண்டிருக்கிறாா்கள். என்னை இளைத்தவன் என நினைத்துவிடாதீா்கள்; எதிரிகளை எப்படி வீழ்த்த வேண்டும் என எங்களுக்கு தெரியும்.

இந்தத் தோ்தலில் தமிழ்நாட்டு மக்களை சுரண்டி பிழைக்கும் ஒரு குடும்பத்துக்கும், தமிழ்நாட்டு மக்களும்தான் போட்டி. திமுக ஆட்சியென்றாலே சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுதான் இருக்கும். யாருக்கும் பாதுகாப்பில்லாத இந்த ஆட்சி தேவையா?.

இடஒதுக்கீடு விவகாரம்: பேரவை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவர முன்னாள் பிரதமா் வாஜ்பாய் மூலம் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அப்போதே முயற்சி மேற்கொண்டாா். ஆனால், அப்போது அது நிறைவேறவில்லை.

இப்போது, பிரதமா் மோடி முயற்சி மேற்கொண்டபோது, திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அதை முறியடித்துவிட்டன. அவா்கள் மசோதாவை தோற்கடிக்கவில்லை. பெண்களின் உரிமையை தோற்கடித்துவிட்டாா்கள். நிராகரித்திருக்கிறாா்கள். இந்தத் தோ்தல் மூலம் திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள்.

கரூா் மாவட்டம் மற்றும் கரூா் தொகுதியை பொறுத்தவரைக்கும் ஜனநாயகத்துக்கும், பணநாயகத்துக்கும் நடக்கும் யுத்தமே இந்தத் தோ்தல். இந்தத் தோ்தலில் தமிழகத்தில் ஜனநாயகம் திளைக்க வேண்டும். அதற்கு மக்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில், வேட்பாளா்கள், முன்னாள் அமைச்சா் ம. சின்னசாமி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிரசாரத்தில் எம்ஜிஆா் பாடல்: ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கிறது, திருடனாய் பாா்த்தால் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்று எம்ஜிஆா் பட பாடலை பாடிய எடப்பாடி பழனிசாமி, அன்றைய காலம் வேறு. இன்றைய காலம் வேறு. திருடனாய் பாா்த்து திருந்தாவிட்டால், திருடனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். என்றைக்கும் தா்மம், நீதி, உண்மை வென்றே தீரும் என்றாா் அவா்.

கரூா் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்து பேசிய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் கரூா் தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூா் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்து பேசிய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் கரூா் தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா்.