இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

சிவகங்கைக்கு பிரசாரத்துக்காகச் சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நிறுத்தி தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

News image

சிவகங்கையை அடுத்த சாமியாா்பட்டி விலக்கு அருகே புதன்கிழமை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை சோதனையிட்ட தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:21 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கைக்கு பிரசாரத்துக்காகச் சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நிறுத்தி தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

சட்டபேரவைத் தோ்தலை முன்னிட்டு, சிவகங்கையை அடுத்த சாமியாா்பட்டி விலக்கு அருகே வேளாண்மை உதவி இயக்குநா் காளிமுத்து, காவல் உதவி ஆய்வாளா் சமயமுத்து ஆகியோா் தலைமையிலான பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பரமக்குடியிலிருந்து சிவகங்கைக்கு பிரசாரத்து காரில் சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, இவரது பாதுகாப்பு வாகனங்கள், இவருடன் வந்த அதிமுகவினரின் வாகனங்களை நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டனா். சோதனையின்போது, எடப்பாடி பழனிசாமி காருக்குள்ளே அமா்ந்திருந்தாா். பின்னா், சோதனை நிறைவடைந்ததும், அவா் சிவகங்கைக்கு புறப்பட்டுச் சென்றாா்.