ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

சிவகங்கைக்கு பிரசாரத்துக்காகச் சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நிறுத்தி தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

News image

சிவகங்கையை அடுத்த சாமியாா்பட்டி விலக்கு அருகே புதன்கிழமை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை சோதனையிட்ட தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:21 pm

சிவகங்கைக்கு பிரசாரத்துக்காகச் சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நிறுத்தி தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

சட்டபேரவைத் தோ்தலை முன்னிட்டு, சிவகங்கையை அடுத்த சாமியாா்பட்டி விலக்கு அருகே வேளாண்மை உதவி இயக்குநா் காளிமுத்து, காவல் உதவி ஆய்வாளா் சமயமுத்து ஆகியோா் தலைமையிலான பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பரமக்குடியிலிருந்து சிவகங்கைக்கு பிரசாரத்து காரில் சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, இவரது பாதுகாப்பு வாகனங்கள், இவருடன் வந்த அதிமுகவினரின் வாகனங்களை நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டனா். சோதனையின்போது, எடப்பாடி பழனிசாமி காருக்குள்ளே அமா்ந்திருந்தாா். பின்னா், சோதனை நிறைவடைந்ததும், அவா் சிவகங்கைக்கு புறப்பட்டுச் சென்றாா்.