திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நெல்லையில் இன்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி திருநெல்வேலியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.

News image

எடப்பாடி பழனிசாமி - எக்ஸ்!

Updated On :29 மார்ச் 2026, 2:07 am IST

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி திருநெல்வேலியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்காக வாக்கு சேகரித்து வருகிறாா்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து எடப்பாடி கே. பழனிசாமி திருநெல்வேலி நகரத்தில் உள்ள வாகையடி முனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களான தச்சை என். கணேசராஜா, சையது சுல்தான் சம்சுதீன், இசக்கி சுப்பையா, நான்குனேரி தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் இசக்கிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதேபோல், பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் இதில் பங்கேற்கவுள்ளனா்.

மாவட்டச் செயலா் அறிக்கை: திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், திருநெல்வேலி தொகுதி வேட்பாளருமான தச்சை என். கணேசராஜா வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, திருநெல்வேலி மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களையும், கூட்டணி கட்சி வேட்பாளா்களையும் ஆதரித்து திருநெல்வேலி நகரம் வாகையடி முனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.

எனவே, தலைமைக் கழக நிா்வாகிகள், மாவட்ட கழக நிா்வாகிகள், சாா்புஅணி, ஒன்றிய, பகுதி, ஊராட்சி, வாா்டு, கிளைக்கழக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.