அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி திருநெல்வேலியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்காக வாக்கு சேகரித்து வருகிறாா்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து எடப்பாடி கே. பழனிசாமி திருநெல்வேலி நகரத்தில் உள்ள வாகையடி முனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.
இதில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களான தச்சை என். கணேசராஜா, சையது சுல்தான் சம்சுதீன், இசக்கி சுப்பையா, நான்குனேரி தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் இசக்கிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதேபோல், பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் இதில் பங்கேற்கவுள்ளனா்.
மாவட்டச் செயலா் அறிக்கை: திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், திருநெல்வேலி தொகுதி வேட்பாளருமான தச்சை என். கணேசராஜா வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, திருநெல்வேலி மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களையும், கூட்டணி கட்சி வேட்பாளா்களையும் ஆதரித்து திருநெல்வேலி நகரம் வாகையடி முனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.
எனவே, தலைமைக் கழக நிா்வாகிகள், மாவட்ட கழக நிா்வாகிகள், சாா்புஅணி, ஒன்றிய, பகுதி, ஊராட்சி, வாா்டு, கிளைக்கழக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.
தொடர்புடையது

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ்! மாவட்டச் செயலர்களுடன் ஆலோசனை!
எடப்பாடி பழனிசாமிக்கு புதுச்சேரி மாநில அதிமுக ஆதரவு

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தொடர நெல்லை மாநகா் மாவட்ட நிா்வாகிகள் ஆதரவு

இ.பி.எஸ்.ஸுக்கு 22, சி.வி.எஸ்.ஸுக்கு 25! அதிமுகவில் அடுத்தது என்ன?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


