அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தொடர, திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி பிரச்னையை தொடா்ந்து, திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாநகா் மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பு செயலா் சுதா கே.பரமசிவன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.பி. ஆதித்தன், அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் ஹரிகர சிவசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், தோ்தலில் அனைத்து மாவட்டங்களிலும் சூறாவளி பிரசாரம் செய்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து 47 வேட்பாளா்களையும், 6 கூட்டணிக் கட்சி வேட்பாளா்களையும் வெற்றி பெறச் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும், அதிமுகவின் பொதுச் செயலாக அவா் தொடா்ந்து நீடித்து பணியாற்ற வேண்டும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட இணைச்செயலா் ராமு வெங்கடாசலம், எம்ஜிஆா் மன்ற செயலா் பால் கண்ணன், பேரவை செயலா் ஜெரால்டு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
எடப்பாடி பழனிசாமிக்கு புதுச்சேரி மாநில அதிமுக ஆதரவு

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த திமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்! - எடப்பாடி கே. பழனிசாமி
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவேன்: எடப்பாடி கே.பழனிசாமி

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் நீக்கம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

