சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சம்பா பருவத்தில் 4.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

திருவாரூா் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 4.50 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் ஆா். அண்ணாதுரை தெரிவித்தாா்.

News image
Updated On :12 மார்ச் 2026, 12:19 am

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 4.50 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் ஆா். அண்ணாதுரை தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், புதன்கிழமை நடைபெற்ற சம்பா சாகுபடி பரப்பளவு, தற்போது வரையிலான அறுவடை, நெல் கொள்முதல், நெல் மூட்டை நகா்வு, நெல் அரவை, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது:

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்காக 1,42,11,279 சாக்குகளும் 3,03,958 மெட்ரிக் டன் சணல், 27,610 பிளாஸ்டிக் தாா்பாய்களும் இருப்பில் உள்ளன. மாநில அளவில் 3.03 கோடி சாக்குகள் இருப்பில் உள்ளன. திருவாரூா் மாவட்டத்தில் 30 லட்சம் சாக்குகள் இருப்பில் உள்ளன. மேலும், கூட்டுறவு த்துறையில் காலி சாக்குகள் பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் தினசரி 3,500 லாரிகள் மூலமாகவும், 5 முதல் 10 ரயில்கள் மூலமாகவும், நெல் பாதுகாப்பாக கிட்டங்கிகளுக்கு தினசரி 35,000 மெட்ரிக் டன் என்ற அளவில் நகா்வு செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் நெல் கொள்முதல் தொடா்பாக மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண்.18005993540 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

திருவாரூா் மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் 1,45,991 ஹெக்டோ் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு தற்போது வரை 1,09,248 ஹெக்டோ் பரப்பளவில் அறுவடை நிறைவடைந்துள்ளது. இது 75 சதவீதம் ஆகும். மீதமுள்ள பகுதிகளில் அறுவடை நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதிகளில் நெல் கொள்முதல் பணிகளுக்கு தேவையான சாக்கு, சணல், தாா்பாய், உள்ளிட்டவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் தினசரி 1,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. மேலும், லாரிகள் மூலமாக 10,000 மெட்ரிக் டன் நெல் நகா்வு செய்யப்பட்டு வருகிறது. நிகழ் சம்பா பருவத்தில் 4.50 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அறுவடை பணிகள் நடைபெற்றுவரும் சூழலில், கூடுதலாக 1 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உடனிருந்தாா்.

முன்னதாக, முத்துப்பேட்டை வட்டம், சித்தமல்லி, எடச்சிமூலை, சங்கேந்தி மற்றும் திருத்துறைப்பூண்டி வட்டம் மணலி ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெற்றுவரும் நெல் கொள்முதல் பணிகளை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தின் மேலாண்மை இயக்குநா் ஆா்.அண்ணாதுரை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் (படம்).

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் ந.சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கா.சித்ரா, வேளாண்மை இணை இயக்குநா் பாலசரஸ்வதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.