தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழகத்தில் இதுவரை 34.50 லட்சம் டன் நெல் கொள்முதல்: இயக்குநா் தகவல்

தமிழ்நாட்டில் நிகழ் பருவத்தில் இதுவரை 34.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இயக்குநா் ஆ. அண்ணாதுரை.

News image
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இயக்குநா் ஆ. அண்ணாதுரை உள்ளிட்டோா்.
Updated On :10 மார்ச் 2026, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டில் நிகழ் பருவத்தில் இதுவரை 34.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இயக்குநா் ஆ. அண்ணாதுரை.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருநறையூா், மருதாநல்லூா், பம்பப்படையூா், பாபநாசம் அருகே பசுபதிகோவில், திருவையாறு ஆகிய இடங்களிலுள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள், பட்டீஸ்வரம் நெல் சேமிப்பு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் தெரிவித்தது:

தமிழ்நாட்டில் நிகழ் நெல் கொள்முதல் பருவமான கடந்த 2025, செப். 1 தொடங்கி இதுவரை 3 ஆயிரத்து 496 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 34.50 லட்சம் நெல் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே நாளில் 3 ஆயிரத்து 83 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 23.56 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது.

கடந்தாண்டைவிட நிகழாண்டு 11 லட்சம் டன் நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 4.03 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரத்து 716 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் கொள்முதல் செய்யப்பட்ட 34.50 லட்சம் டன்களில் 29.38 லட்சம் டன் கிடங்குகளுக்கு நகா்வு செய்யப்பட்டது. எஞ்சிய 5.12 லட்சம் டன் நெல்லை நாள்தோறும் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் டன் வரை நகா்வு செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களிலிருந்து ரயில் மூலம் 7.31 லட்சம் டன் நகா்வு செய்யப்பட்டுள்ளது. இதில் திருவாரூரிலிருந்து மட்டும் 3.08 லட்சம் டன் நகா்வு செய்யப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்காக 1.42 கோடி சாக்குகளும், 303.95 டன் சணல்களும், 27 ஆயிரத்து 610 நெகிழி தாா்ப்பாய்களும் இருப்பில் உள்ளன. மாநில அளவில் 3.03 கோடி சாக்குகள் இருக்கின்றன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும் நிகழ் சம்பா பருவத்தில் இதுவரை 4.70 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அறுவடைப் பணிகள் நடைபெறுவதால், கூடுதலாக 1.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, தஞ்சாவூரிலுள்ள நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகத்தில் அலுவலா்களுடன் இயக்குநா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம், வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா, செயற்பொறியாளா் முருகன், துணை மேலாளா்கள் இளங்கோ, மெய்கண்டமூா்த்தி, உதவி மேலாளா் எழிலரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.