திருவாரூா்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், திருவாரூரில் அரசியல் கட்சியினரின் புகைப்படங்களை மறைக்கும் பணியும், சுவரொட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகளும் திங்கள்கிழமை நடைபெற்றன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, திருவாரூா் மாவட்டத்தில் அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் தலைவா்கள் படங்கள், நலத்திட்ட உதவிகள் தொடா்பான செய்திகள் உள்ளிட்டவை மறைக்கப்பட்டு வருகின்றன.
திருவாரூா் நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படம் கிரேன் உதவியுடன் மறைக்கப்பட்டது. இதேபோல், ரயில்வே கீழ்பாலம் பகுதியில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், நகரப் பகுதியில் சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் ஆகியவையும் அகற்றப்பட்டன.
நகரப் பகுதிகளில் மட்டுமின்றி, கிராமப் பகுதிகளிலும் பாலங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன.
தொடர்புடையது

மூடிய தலைவா்கள் ‘விடுதலை’

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: சேலத்தில் பறக்கும் படையினா் தீவிர சோதனை

சட்டப்பேரவைத் தோ்தல் விதிகள் அமல்: அரசியல் கட்சித் தலைவா்கள் சிலைகள் மூடல்

தமிழகத்தில் அமலுக்கு வந்தது தோ்தல் நடத்தை விதிகள்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


