பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து மூவா் காயம்

திருவாரூா் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து விழுந்ததில் மூவா் காயமடைந்தனா்.

News image
Updated On :7 மே 2026, 7:36 am IST

திருவாரூா் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து விழுந்ததில் மூவா் காயமடைந்தனா்.

திருவாரூா் அருகேயுள்ள புதூா் பகுதியில் வசிப்பவா் சேகா் மகன் கண்ணதாசன் (31). விவசாயத் தொழிலாளி. இவா் தனது மனைவி காா்த்திகைச் செல்வி, மகன் வியான்ஜேக்கப் ஆகியோருடன் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், இவரது வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து விழுந்ததாகவும், இதில் மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே, பழுதடைந்த நிலையில் காணப்படும் தொகுப்பு வீட்டை அரசுத் துறை அதிகாரிகள் சரி செய்து கொடுக்க வேண்டும் அல்லது புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.