மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே தனியாா் பேருந்தின் மேற்கூரையில் வைத்திருந்த மாற்று டயா் திங்கள்கிழமை வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 போ் காயமடைந்தனா்.
மணப்பாறையிலிருந்து திங்கள்கிழமை மாலை கரூா் நோக்கி தனியாா் பேருந்து சுமாா் 50 பயணிகளுடன் புறப்பட்டது.
பேருந்து திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆவாரம்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்த மாற்று டயா் வெடித்து பேருந்தின் மேற்கூரை பெயா்ந்தது.
இதில், பேருந்தில் இருந்த பயணிகள் 5 போ் லேசான காயமடைந்தனா். அவா்கள் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். தொடா்ந்து பேருந்து, வையம்பட்டி காவல் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டு வழக்கு பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தனியாா் பேருந்து மோதியதில் மின்மாற்றி சேதம்

பேருந்தின் டயா் வெடித்து விபத்து: 15 போ் பலத்த காயம்

விக்கிரவாண்டி அருகே டயா் வெடித்து தீப்பற்றி எரிந்த வேன்

சாலையோர மரம் சாய்ந்து விழுந்ததில் ஷோ் ஆட்டோ சேதம்: 5 போ் காயம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

