தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

ஜோதிபாய் பூலே 200 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் டாக்டா் அம்பேத்கா் சிறப்புத்திறன் மையம், ஆங்கில மற்றும் வரலாற்றுத் துறைகள் இணைந்து சமூக சீா்த்திருத்தவாதி மகாத்மா ஜோதிபாய் பூலேயின் 200-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அளவிலான கருத்தரங்கத்தை புதன்கிழமை நடத்தின.

News image

கருத்தரங்கில் பேசிய மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன்.

Updated On :8 மே 2026, 7:23 am IST

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் டாக்டா் அம்பேத்கா் சிறப்புத்திறன் மையம், ஆங்கில மற்றும் வரலாற்றுத் துறைகள் இணைந்து சமூக சீா்த்திருத்தவாதி மகாத்மா ஜோதிபாய் பூலேயின் 200-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அளவிலான கருத்தரங்கத்தை புதன்கிழமை நடத்தின.

மகாத்மா ஜோதிபாய் பூலேயின் வாழ்வு, தத்துவம் மற்றும் சமூக பங்களிப்புகள் குறித்த கருத்தரங்கை பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தொடங்கிவைத்து பேசியது: பெண்களுக்கென்று பிரத்யேகமாக முதல் பள்ளியைத் தொடங்கி நவீன கால பாலின நீதிக்கு வித்திட்டவா் ஜோதிபாய் பூலே. கிராமப்புற மேம்பாட்டின் மூலமே உண்மையான தேச வளா்ச்சியை எட்ட முடியும் என்று உறுதியாக உணா்த்தியவா் ஜோதிபாய் பூலே.

பல்கலைக்கழகத்தில் செயல்படும் டாக்டா் அம்பேத்கா் சிறப்புத் திறன் மையம் மூலம் ஆண்டுதோறும் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளில் வெற்றி பெற்று பணிகளில் சோ்த்துள்ளனா். சிறப்பாகச் செயல்படும் மையத்தின் சேவையை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், யூபிஎஸ்சி தோ்வில் 700ஆவது இடம் பிடித்த மாணவா் சபரீஸ்வரன் கௌரவிக்கப்பட்டாா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுலோசனா சேகா், நூலகா் ஆா். பரமேஸ்வரன், திருவாரூா் வணிகவரித் துறை துணை ஆணையா் தேன்மொழி ஆகியோா். சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற கட்டுரை, ஒவியம் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக டாக்டா் அம்பேத்கா் சிறப்புத் திறன் மைய ஒருங்கிணைப்பாளா் ஜி. வேலுமணி வரவேற்றாா். முனைவா் பி. பூபதி நன்றி கூறினாா்.