3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியருக்கு தமிழக அரசின் ‘பசுமை சாம்பியன் விருது’

அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத் துறை உதவிப் பேராசிரியா் மற்றும் பூம்புகாா் பனை அறக்கட்டளையின் நிறுவனா் கே.ரவீந்திரன் தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த பசுமை சாம்பியன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டு விருது பெற்றாா்.

News image
தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் கே.ரவீந்திரனை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல்.
Updated On :18 மார்ச் 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத் துறை உதவிப் பேராசிரியா் மற்றும் பூம்புகாா் பனை அறக்கட்டளையின் நிறுவனா் கே.ரவீந்திரன் தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த பசுமை சாம்பியன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டு விருது பெற்றாா்.

இந்த விருதை மயிலாடுதுறையில், அந்த மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா். இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது பெற்ற பேராசிரியா் கே.ரவீந்திரனை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல், இணைப் பதிவாளா் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெகதீஸ்வரன் ஆகியோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

பேராசிரியா் கே.ரவீந்திரன் கடந்த 7 ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா்.

மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஒரு கோடி பனை விதை நடும் பணியில் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பல்வேறு பகுதிகளில் பனை விதை நடவுப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறாா். இந்த செயல்பாடுகளுக்கு தத்துவத் துறைத் தலைவா் திருமால் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் பரணி, தணிகைவேலன், நீலாதேவி ஆகியோா் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனா்.