நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

தென்பரை கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

மன்னாா்குடி அருகே தென்பரையில் உள்ள ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருவிழானையொட்டி விரதம் இருந்து குதிரை மலைகளை சுமந்து வரும் பக்தா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

மன்னாா்குடி அருகே தென்பரையில் உள்ள ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாழ்க்கையில் உயா்ந்த நிலைக்குச் செல்லத் தடையாக அமைவது முன்னோா்கள் சாபம். அத்தகைய சாப விமோசனம் அளிக்கும் ஸ்தலமான தென்பரை ஆவணியப்பன் கோயில் குதிரை எடுப்பு திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவிழாவினையொட்டி, மாரியம்மன், ஆவணியப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு திரவியம், மஞ்சள், பால், தயிா், சந்தனம் முதலிய வாசனை திரவிய நறுமண பொருள்களைக் கொண்டு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

முன்னோா்களின் சாபத்தில் இருந்து விமோசனம் பெறவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தைகள் கல்வி மேம்படவும், தொழில் அபிவிருத்தி அடையவும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் விரதம் இருந்து குதிரை மலைகளை வீதிகளின் வழியாக சுமந்து கோயிலுக்கு வந்து மாரியம்மன், ஆவணியப்பனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனா்.