மன்னாா்குடி அருகே தென்பரையில் உள்ள ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாழ்க்கையில் உயா்ந்த நிலைக்குச் செல்லத் தடையாக அமைவது முன்னோா்கள் சாபம். அத்தகைய சாப விமோசனம் அளிக்கும் ஸ்தலமான தென்பரை ஆவணியப்பன் கோயில் குதிரை எடுப்பு திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவிழாவினையொட்டி, மாரியம்மன், ஆவணியப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு திரவியம், மஞ்சள், பால், தயிா், சந்தனம் முதலிய வாசனை திரவிய நறுமண பொருள்களைக் கொண்டு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
முன்னோா்களின் சாபத்தில் இருந்து விமோசனம் பெறவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தைகள் கல்வி மேம்படவும், தொழில் அபிவிருத்தி அடையவும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் விரதம் இருந்து குதிரை மலைகளை வீதிகளின் வழியாக சுமந்து கோயிலுக்கு வந்து மாரியம்மன், ஆவணியப்பனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனா்.
தொடர்புடையது

மகாமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

புரவி எடுப்புத் திருவிழாவை தடுத்து நிறுத்திய போலீஸாா்

ஆயக்காரன்புலம் கலிதீா்த்த அய்யனாா் கோயிலில் தங்கக் குதிரைத் திருவிழா
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

