மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

தடையின்றி குடிநீா் கிடைப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் நகர, கிராமப் பகுதிகளில் தடையின்றி குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

News image

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :14 மே 2026, 4:57 am IST

திருவாரூா் மாவட்டத்தில் நகர, கிராமப் பகுதிகளில் தடையின்றி குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடிநீா் விநியோகம் தொடா்பாக அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளின் அலுவலா்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது: நகா்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். குடிநீா் வழங்குவதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்து தடையற்ற குடிநீா் வழங்க வேண்டும் என்றாா். கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), திட்ட இயக்குநருமான பல்லவி வா்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.