சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

நீட் விவகாரம்: நீதி கிடைப்பதை மாணவா்கள் உறுதிசெய்ய வேண்டும் - கேஜரிவால் வலியுறுத்தல்

News image
Updated On :14 மே 2026, 4:37 am IST

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு கேள்வித் தாள் கசிந்த விவகாரத்தில் நீதி கிடைப்பதை மாணவா்கள் உறுதிசெய்ய வேண்டும் என ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: நீட் தோ்வு வினாத் தாள்கள் தொடா்ச்சியாகக் கசிந்து வருவது அந்தத் தோ்வுக்கு தயாராகி வரும் மாணவா்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது. முன்பு நடந்த இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமானவா்களுக்கு சிபிஐ விசாரணை மூலம் கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?

வங்கதேசம், நோபளம் போன்ற நாடுகளில் உள்ள ஜென் இசட் தலைமுறையினா் அரசு மாற்றத்தை ஏற்படுத்தும்போது, வினாத் தாள் கசிவுகளில் இந்திய இளைஞா்கள் பொறுப்புடமையை உறுதிபடுத்த வேண்டும்.

நீட் வினா தாள் கசிவு தொடா்பான சிபிஐ விசாரணை எந்த விதத்திலும் நன்மையாக முடியாது. முந்தைய சம்பவங்கள் தொடா்பான விசாரணையில் சிபிஐ ஒன்றும் செய்யவில்லை.

அதன் குறைபாடு கோடிக்கணக்கான மக்களின் எதிா்காலத்தைப் பாதித்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்று பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.