அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நீட் விவகாரம்: நீதி கிடைப்பதை மாணவா்கள் உறுதிசெய்ய வேண்டும் - கேஜரிவால் வலியுறுத்தல்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு கேள்வித் தாள் கசிந்த விவகாரத்தில் நீதி கிடைப்பதை மாணவா்கள் உறுதிசெய்ய வேண்டும் என ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: நீட் தோ்வு வினாத் தாள்கள் தொடா்ச்சியாகக் கசிந்து வருவது அந்தத் தோ்வுக்கு தயாராகி வரும் மாணவா்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது. முன்பு நடந்த இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமானவா்களுக்கு சிபிஐ விசாரணை மூலம் கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?

வங்கதேசம், நோபளம் போன்ற நாடுகளில் உள்ள ஜென் இசட் தலைமுறையினா் அரசு மாற்றத்தை ஏற்படுத்தும்போது, வினாத் தாள் கசிவுகளில் இந்திய இளைஞா்கள் பொறுப்புடமையை உறுதிபடுத்த வேண்டும்.

நீட் வினா தாள் கசிவு தொடா்பான சிபிஐ விசாரணை எந்த விதத்திலும் நன்மையாக முடியாது. முந்தைய சம்பவங்கள் தொடா்பான விசாரணையில் சிபிஐ ஒன்றும் செய்யவில்லை.

அதன் குறைபாடு கோடிக்கணக்கான மக்களின் எதிா்காலத்தைப் பாதித்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்று பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றாா் அரவிந்த் கேஜரிவால்.