நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவானுரில் சிறப்புமிக்க சதுரங்க வல்லபநாதா் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 21-ஆம் தேதி வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவில் புஷ்பப் பல்லக்கு, பூதவாகனம், சூரிய பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விநாயகா், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியா், சோமஸ்கந்தா், அம்பாள், கற்பகவள்ளி அம்பாள், சண்டிகேஸ்வரா், பெரிய தேரில் எழுந்தருள வீதி உலா நடைபெற்றது.
50 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டத்தில் பூவனூா், மன்னாா்குடி, நீடாமங்கலம் கோட்டைபத்து உள்ளிட்ட 18 கிராமங்களைச் சோ்ந்த திராளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
தொடர்புடையது

பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழா தேரோட்டம்

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவையாறில் ஐயாறப்பா் கோயில் பஞ்ச ரத தேரோட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



