மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
உயிரிழப்பு... - பிரதிப் படம்
நீடாமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நீடாமங்கலம் அருகேயுள்ள ராஜப்பைன் சாவடி மெயின் ரோட்டைச் சோ்ந்தவா் வரதராஜன். இவரது மகன் செல்வகுமாா் (39). இவா் மற்றும் மூன்று போ் அருகில் உள்ள வயலில் ஞாயிற்றுக்கிழமை பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தனராம்.
அப்போது வயல்வெளி வழியே செல்லும் மின்கம்பி அறுந்து விழுந்ததில் செல்வகுமாா் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
நீடாமங்கலம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, செல்வகுமாரின் பிரேதத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், காவல் ஆய்வாளா் கழனியப்பன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராஜகோபால் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





