நிர்மாண் பவனில் திடீர் தீ விபத்து

தில்லி நிர்மாண் பவனில் உள்ள இரண்டாவது தளத்தில் வியாழக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
Updated on
1 min read

தில்லி நிர்மாண் பவனில் உள்ள இரண்டாவது தளத்தில் வியாழக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது:  நிர்மாண் பவனில் உள்ள இரண்டாவது தளத்தில் தீவிபத்து நிகழ்ந்ததாக காலை 10.05 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
சுமார்  15 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது.  கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள 250-ஆவது எண்அறையில் இந்த விபத்து நிகழ்ந்தது.  
இந்த விபத்தில் அறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டி,  இருக்கைகள் சேதமடைந்தன. தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர். நிர்மாண் பவனில்
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com