இறைச்சிக் கூடங்களில் அதிரடி சோதனை
கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட ஷாரதா, பிரம்மபுரி ஆகிய இடங்களில் உள்ள இறைச்சிக் கூடங்களில் முறையான அனுமதி இல்லாமல் விலங்குகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில் கிழக்கு தில்லி கால்நடை சேவை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் காவல் துறையின் உதவியுடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையின் போது அனுமதி பெறாமல் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த 26 காளை மாடுகள் மீட்கப்பட்டன. ரொக்கம் ரூ.12,000 கைப்பற்றப்பட்டது. இறைச்சிக் கூட உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...