பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு என்டிஎம்சியில் சிறப்புப் பயிற்சி முகாம்

வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) பள்ளிகளில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:32 pm

DIN

வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) பள்ளிகளில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது என்று அந்த மாநகராட்சி இயக்குநர் (கல்வி) ஏ.கே.ஹெம் வியாழக்கிழமை தெரிவித்தார். 
மாநகராட்சி தலைமையிடம் அமைந்துள்ள சிவிக் சென்டரில் வியாழக்கிழமை நடைபெற்ற என்டிஎம்சி பள்ளிகளின் முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
இக்கூட்டம் தொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சி இயக்குநர் (கல்வி) ஏ.கே.ஹெம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆராயப்பட்டது. 
மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் பராமரிப்பு நிதியை செலவு செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வழிமுறைகள் தொடர்பாக பேசப்பட்டது. படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு கோடை விடுமுறையின் போது, சிறப்புப் பயிற்சி முகாமை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.