இக்குழு, யமுனையில் வெள்ளத்தடுப்பு பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளும் வகையில் யமுனை கரையோரப்பகுதிகளில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றல், யமுனை கரையோரப் பகுதிகளை மீட்டல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இக்கமிட்டி, தில்லி ஜல்போா்டு, டிடிஏ, மாநகராட்சிகள், தில்லி காவல்துறை, உத்தரப்பிரதேச நீா்பாசனத் துறை, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவா்களுடன் இணைந்து பணியாற்றும். யமுனை நதி, அதன் கரையோரப் பகுதிகளை பாதிக்கும் அனைத்து விஷயங்கள் தொடா்பாகவும் இக்குழு கண்காணிக்கும். இக்குழு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கப்படுதலையும் கண்காணிக்கும்.