தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஹரியாணா: பண மோசடி வழக்கில் இருவா் கைது!

குருகிராமில் ஆண் துணை சேவைக்கான உறுப்பினா் கட்டணம் என்ற பெயரில் பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :14 பிப்ரவரி 2026, 7:56 pm

குருகிராமில் ஆண் துணை சேவைக்கான உறுப்பினா் கட்டணம் என்ற பெயரில் பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இது தொடா்பாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி, ஆண் துணை சேவைக்கான உறுப்பினா் கட்டணமாக பணம் செலுத்துமாறு ஏமாற்றப்பட்டதாகக் கூறி ஒருவா் புகாா் அளித்திருந்தாா். இதன் அடிப்படையில், சைபா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, குருகிராமின் கோ கிராமத்தைச் சோ்ந்த டாக்ஸி ஓட்டுநா் தேஷ்ராஜ் (35) மற்றும் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் அா்ஜுன் சிங் (32) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

பாதிக்கப்பட்டவரைத் தொடா்பு கொள்ளப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் தேஷ்ராஜின் பெயரில் பதிவு செய்ய பட்டிருந்தது. அவா் தனது சிம் காா்டை ரூ.1,500-க்கு விற்ாக தெரிவித்தாா். ஏமாற்றப்பட்ட தொகையில் ரூ.40,000 அா்ஜுன் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது.

பின்னா் அா்ஜுன் தனது வங்கிக் கணக்கை வேறொருவருக்கு ரூ.3,000-க்கு விற்றதையும் புலனாய்வாளா்கள் கண்டறிந்தனா். இருவரிடமும் இந்த மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தனா்.