தில்லி ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதிதாக 3 பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறியதாவது:
2019 மக்களவைத் தேர்தல், 2020 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு ஆம் ஆத்மியினர் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தில்லி பல்கலைக்கழகங்களில் உள்ள கல்லூரிகளை இணைக்கும் வகையில், தில்லி ஆசிரியர் சங்கம், தில்லி ஆசிரியர்கள் அல்லாப் பணியாளர்கள் சங்கம், தில்லி ஆராய்ச்சியாளர் சங்கம் ஆகிய 3 சங்கங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. இந்தச் சங்கங்களில் தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுமையின் கீழ் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஆராச்சியாளர்கள் இடம் பெறுகின்றனர் என்றார் அவர். அதற்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாகிகள்: தில்லி ஆசிரியர் சங்கத்துக்கு தலைவராக பிரதீப் குமார் சிங் (அம்பேத்கர் கல்லூரி), பொதுச் செயலராக நாகேந்திர குமார் (பார்தி கல்லூரி) நியமிக்கப்பட்டுள்ளனர்.
தில்லி ஆசிரியர்கள் அல்லாப் பணியாளர்கள் சங்கத்துக்கு தலைவராக கேதார்நாத் (தில்லி பல்கலைக்கழகம்), பொதுச் செயலராக அமர்தீப் காஷ்யப் (தில்லி பல்கலைக்கழகம்) நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, தில்லி ஆராய்ச்சியாளர்கள் சங்கத்துக்கு தலைவராக மனோஜ் குமார் குப்தா (தில்லி பல்கலைக்கழகம்), பொதுச் செயலராக சுஜித் குமார் யாதவ் (தில்லி பல்கலைக்கழகம்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆதிச்சநல்லூரில் மரங்கள் வெட்டிக் கடத்தல்: எம்எல்ஏவிடம் புகாா்

ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: திருச்செந்தூா் விஏஓ கைது

நகராட்சி ஆணையரை கண்டித்து குழித்துறை நகா்மன்றத்தில் 5 உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

செய்யூா் வட்ட ஜமாபந்தியில் 73 மனுக்கள் ஏற்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


