ரஃபேல் போர் விமான உற்பத்தியில் ஐடிஐ மாணவர்களுக்கு வாய்ப்பு

ரஃபேல் போர் விமானங்களில் உதிரி பாகங்களை இணைக்கும் பணியில் மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச்
Updated on
1 min read

ரஃபேல் போர் விமானங்களில் உதிரி பாகங்களை இணைக்கும் பணியில் மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சேர்ந்த ஐடிஐ (தொழிற்கல்வி) மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ரஃபேல் போர் விமான தயாரிப்பில் பிரான்ஸைச் சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
 ரஃபேல் விமான பாகங்களை இணைக்கும் படிப்பை நாகபுரி ஐடிஐ நிறுவனத்தில் தொடங்குவதற்கு அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதில் சேர்ந்து 2 ஆண்டுகள் படிக்கும் மாணவர்கள் ரஃபேல் விமானத் தயாரிப்பில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இதுகுறித்து நாகபுரி ஐடிஐ முதல்வர் ஹேமந்த் அவாரே கூறுகையில், "இந்த நிதியாண்டில் (2019-2020) அந்தப் படிப்பை தொடங்கத் திட்டமிட்டு வருகிறோம். தலா 21 பேர் கொண்ட 2 பிரிவுகள் ஏற்படுத்தப்படும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com