Enable Javscript for better performance
மத்திய அமைச்சருடன் மாயாபுரி வணிகர்கள் சந்திப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மத்திய அமைச்சருடன் மாயாபுரி வணிகர்கள் சந்திப்பு

    By DIN  |   Published On : 17th April 2019 01:11 AM  |   Last Updated : 17th April 2019 01:11 AM  |  அ+அ அ-  |  


    மாயாபுரி சீலிங் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்கள் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி ஆகியோரை செவ்வாய்கிழமை நேரில் சந்தித்தனர்.
    தில்லி பாஜக அலுவலகத்தில் மனோஜ் திவாரியை சந்தித்த அவர்கள்,  சீலிங் நடவடிக்கையில் வணிகர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
    அப்போது, வணிகர்கள் மத்தியில் பேசிய மனோஜ் திவாரி, மாயாபுரியில் தில்லி அரசே சீலிங் நடவடிக்கையை மேற்கொண்டது. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்திய தில்லி அரசே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். பாஜகவுக்கு பெரும் பலமாக இருக்கும் வணிகர்களை பாஜகவுக்கு எதிராகத் திருப்பும் நோக்கில்  தில்லி அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது' என்றார். 
    இதேபோன்று,  மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை அவரது அலுவலகத்தில் வணிகர்கள் சந்தித்தனர். அப்போது, மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் பர்வேஷ் வர்மாவும் உடனிருந்தார். 
    இது தொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் ஹர்தீப் சிங் புரி  தில்லி அரசின் பொறுப்பற்ற தன்மையால் பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வணிகர்களுக்கு ஆதரவாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது தில்லி அரசின் கடமையாகும். மாறாக, இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது தவறாகும். இந்த விவகாரத்தில் தில்லி வளர்ச்சி ஆணையம் வணிகர்களுக்கு நிலம் ஒதுக்கவில்லை என கேஜரிவால் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். நிலம் ஒதுக்குமாறு தில்லி வளர்ச்சி ஆணையத்தை கேஜரிவால் கோரவில்லை. தாங்கள் இழைத்த தவறுகளுக்காக மத்திய அரசைக் குற்றம் சாட்டுகிறது தில்லி அரசு' என்று தெரிவித்துள்ளார்.
     

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp