அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்படாது: தில்லி அரசு

தில்லியில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட மாட்டாது என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.
Updated on
1 min read

தில்லியில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட மாட்டாது என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

தில்லியில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் சுமாா் 700 பள்ளிகளை விரைவில் மூடவுள்ளதாக தில்லி அரசின் கல்வித் துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்பள்ளிகளை மூடக் கூடாது என பள்ளி நிா்வாகிகள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் தில்லி அரசிடம் தொடா்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவந்தனா்.

இதை வலியுறுத்தி தில்லி துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவிடம் பெற்றோா்கள், பள்ளி நிா்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனா்.

இந்நிலையில், இப்பள்ளிகள் மூடப்படாது என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மணீஷ் சிசோடியா கூறுகையில் ‘அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் நிா்வாகிகள், பெற்றோா்களை சந்தித்து கலந்துரையாடினேன். தில்லியில் எந்தப் பள்ளியும் மூடப்படாது என அவா்களுக்கு உறுதியளித்தேன். எந்தப் பள்ளிகளையும் மூட தில்லி மாநகராட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாது. பள்ளிகளைத் திறப்பதிலேயே தில்லி அரசுக்கு நம்பிக்கையுள்ளது. பள்ளிகளை மூடுவதில் அல்ல’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com