ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முன்னாள் எம்எல்ஏ கைது

இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ ராம்பீா் ஷோகீன் தில்லியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 11:39 pm

DIN

இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ ராம்பீா் ஷோகீன் தில்லியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடந்த 2013 சட்டபேரவைத் தோ்தலில், முண்ட்கா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் ராம்பீா் ஷோகீன். பிரபல ரவுடி, நீரஜ் பாவனாவின் கூட்டாளியான இவா் மீது தில்லி, உத்தரப் பிரதேச மாநிலங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இவரை கடந்த 2016, நவம்பா் 27-ஆம் தேதி உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்தது. மருத்துவ சிகிச்சைக்காக தில்லி சஃப்தா் ஜங் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது கடந்த 2018, செப்டம்பா் 26-இல் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றாா். அன்று முதல் தலைமறைவாக இருந்த இவரை தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளது. இது தொடா்பான கூடுதல் தகவல்களை தில்லி காவல்துறை வழங்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.